தமிழக அரசு அதிரடி திட்டம்! மூன்று வேளையும் இலவச உணவு
ஊரடங்கு காலத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் அடைவார்கள். மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் அத்தனை அரசு மருத்துவனைகளுக்கும் விரிவுபடுத்தபடும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்றாலும் மக்கள் பசி போக்க முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் கொரோனா பொது முடக்கத்தில் அம்மா உணவகத்தில் மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் நிதி அளித்துள்ளார்.
அன்பழகனின் இந்த முயற்சி பிற அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.