பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் பளார் என அறைந்த நபர் யார்? வெளியான பரபரப்பு வீடியோ!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நபர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாவது சுற்றாக தென்கிழக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள டெய்ன் எர்மிடேஜ் என்ற கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, அக்கிராமத்தி வந்திறங்கிய மக்ரோன் அங்குள்ள மக்களுக்கு கையசைத்து காட்டியதுடன் அவர்களுடன் கை குலுக்கியும் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
அப்போது கை கொடுத்த இளைஞர் ஒருவர் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் மக்ரோனின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை பாதுகாப்பு வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர்கள் சுதாரித்துக்கொண்டு அந்த நபரை கீழே தள்ளினர்.
அதன்பின்னர் அந்த இளைஞரை கைது செய்தனர். பொதுவெளியில் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விசாரணையில் பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மஞ்சள் ஜாக்கெட் குழுவினரை சேர்ந்தவரா அந்த இளைஞர் என்ற ரீதியிலும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.