4 வயது மகள் கொரோனாவால் உயிரிழப்பு: கதறியழுத தாய்! கொரோனா ஊசியை எதிர்த்தவர்களின் பரிதாப நிலை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை எதிர்த்து வந்த இளம் பெண்ணின் 4 வயது குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே இரவில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கல்வேஸ்டன் கவுன்டியைச் சேர்ந்தவர் காரா ஹார்வுட். இவர் தொடர்ந்து கொரோ தடுப்பூசியை எதிர்த்ததுடன், இதுகுறித்து பல இடங்களில் பேசியும் வநதுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் இவருக்கும், இவரைத் தொடர்ந்து வீட்டில் இவரது 4 வயது குழந்தை கேலியும், அவருடன் மற்ற மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டதும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருந்துகள் கொடுக்கப்பட்டும், மறுநாள் காலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு வேறு இணை நோய்கள் இல்லை. இருப்பினும் கொரோனா பாதித்த ஒரே நாளில் குழந்தை இறந்தது அந்தக் குடும்பத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக குழந்தையின் தாய் காரா தனது தடுப்பூசி எதிர்ப்புக் கொள்கை தவறானது முட்டாள்தனமானது எனப் புலம்பி வருகிறார்.
உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் தடுப்பூசிக்கு எதிராகப் பேசியிருக்கிறேன். அப்படிச் செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் இனிமேல் எதையும் மாற்ற முடியாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 5 வயது குழந்தைகளுக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் குழந்தை கேலிக்கு அவரது தாயார் மூலமே தொற்று பரவியதும் உறுதியாகியுள்ளது.