அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து திருமணம் செய்த வெள்ளைக்கார தம்பதிகள்.. வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்!
தமிழ் கலாச்சாரத்தை என்னதான் தமிழர்கள் மறந்து வந்தாலும், வெளிநாட்டவர்கள் அதை பின்பற்றுவதை அடிக்கடி பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில், வெள்ளைக்கார ஜோடிகள், அம்மி மிதித்து... அருந்ததிபார்த்து இந்துமுறைப்படி திருமண செய்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தம்பதிகள் கோமாதாவை வணங்கி, அக்னி சாட்சியாக, மந்திரங்கள் முழங்க சாஸ்திர, சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்து இந்து தமிழர் பாரம்பரிய முறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
அதைவிடவும் தங்கள் கைகளாலே அவர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு உணவும் பரிமாறியதுடன், திருமணத்தில் கல்லந்துகொண்ட அனைவருமே கீழே அமர்ந்திருந்து உணவருந்தியுள்ளனர்.
இதுகுறித்த தம்பதிகளுக்கு பலரும் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறிவரும் நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.