மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது... ஏன் தெரியுமா?

By Nivetha Jun 05, 2022 04:34 AM GMT
Report

பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு விடயம் மாதவிடாய்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் இதையெல்லாம் செய்யலாம் இதையெல்லாம் செய்யக் கூடாது என்று பெரிய பட்டியலே இருக்கிறது.

மாதவிடாய் நாட்களில் தனியே இருக்க வேண்டும், சில உணவுகளை சாப்பிடக்கூடாது, வெளியே செல்லக் கூடாது  என்று பல பழக்கவழக்கங்கள் பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. 

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது... ஏன் தெரியுமா? | Food Why Were Women Not Allowed To Touch Pickles

அதில் முக்கியமானது மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாயைத் தொட்டால் ஊறுகாய் கெட்டுவிடும் என்பது.

தற்போதும் கூட பல வீடுகளில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊறுகாயை தொடக்கூடாது என்ற பழக்கம் இருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். 

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது... ஏன் தெரியுமா? | Food Why Were Women Not Allowed To Touch Pickles

ஆதிகாலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையலறைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதாவது மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமைக்க மாட்டார்கள்.  அதுமட்டுமின்றி அவர்கள் குறிப்பாக ஊறுகாய்களை தொடக்கூடாது .

மாதவிடாய் நாட்களில் ஏன் சமைக்க கூடாது?

கரு உருவாகாமல் இருக்கும் பொழுது பெண்ணின் கர்ப்பப்பைக்குள் இருக்கும் கருமுட்டை உடைந்து அதிலிருந்து ரத்தம் திரவமாக 3 – 5 நாட்கள் வரை வெளியேறும்.

எனவே பெண்கள் அந்த காலத்தில் தங்களை சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம் இன்ஃபெக்ஷனை தவிர்க்கலாம்.

அனால், முன்பு பெண்கள் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கிற்கு துணியை தான் பயன்படுத்தினார்கள். துணியை பயன்படுத்துவது அந்த அளவுக்கு சுகாதாரமானதாக இல்லை.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது... ஏன் தெரியுமா? | Food Why Were Women Not Allowed To Touch Pickles

அதனால் சமையல் மற்றும் உணவு சம்மந்தப்பட்ட வேலைகளில் செய்யக் கூடாது என்று தனியே வைக்கப்பட்டனர்.

கால மாறுதலுக்கு ஏற்ப தற்பொழுது நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இதனால் தொற்று ஏற்படும் அபயாமும் தற்போது குறையும்.

எனவேதான் அந்த நாட்களில் பெண்கள் சமைக்க கூடாது, மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தனித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

மேலும் தற்போது இருப்பது போல சமையலுக்கு, அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என்று எந்த இயந்திரங்களும் இல்லை. பெண்கள் தான் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார்கள்.

எனவே மாதவிடாய் நாட்களில் அதாவது பெண்களுக்கு ஓய்வு வேண்டும் என்றுதான் அந்த மூன்று நாட்களும் தனியே இருக்க வேண்டும் என்று கூறியதாக பலரும் கூறுகிறார்கள்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது... ஏன் தெரியுமா? | Food Why Were Women Not Allowed To Touch Pickles

ஊறுகாயை தொடக்கூடாதா? 

வீட்டிலேயே குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் வீட்டிலேயே தயாரிக்கும் பழக்கம் இருந்தது. அதில் ஊறுகாயும் அடங்கும்.

ஊறுகாய் தயார் செய்வது என்பது கடினமான வேலைகளில் ஒன்று.

அது மட்டுமின்றி ஊறுகாயை தொட்டால் கெட்டுவிடும் என்று கூறுவதற்கும் இன்னொரு காரணமும் இருக்கிறது. மாதவிடாய் நாட்களில் எளிதாக செரிமானமாகும் அளவுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது... ஏன் தெரியுமா? | Food Why Were Women Not Allowed To Touch Pickles

பொதுவாகவே ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக காரம் மற்றும் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே ஊறுகாயை அதிகமாக சாப்பிடும்போது ஏற்கனவே மாதவிடாய் நாட்களில் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு வயிற்று வலி அல்லது செரிமான பிரச்சனை ஏற்பட்டால் அது கூடுதலாக உடல் நலத்தை பாதிக்கும்.

இந்த காரணத்தால் ஊறுகாயை தொடக்கூடாது தொட்டால் கெட்டுவிடும் என்று கூறியிருக்கின்றார்கள். ஆனால் அப்படி கெட்டு போகும் உணவு ஊறுகாய் இல்லை. சாப்பிடுவதை தவிர்க்க மூதாதையர் பின்பற்றிய சாமத்தியம் இது.

நீண்ட நாட்கள் ஊறுகாய் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  1. ஊறுகாய் கெடாமல் இருப்பதற்கு ஊறுகாயை காற்றுப்புகாத உணர்ந்த பாட்டிலில் அல்லது டின்னில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
  2. ஊறுகாய் எடுக்கும் பொழுது எப்பொழுதுமே உலர்வான ஸ்பூனை பயன்படுத்த வேண்டும்.
  3. ஈரக் கைகளால் ஊறுகாயை தொடக்கூடாது.
  4. ஊறுகாயை சூரிய ஒளியில் உலர்த்தினால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
  5. அதிக காரம் மற்றும் உப்பு சேர்ப்பதும் இயற்கையான பிரசர்வேட்டிவ்வாக மாறி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும்.



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US