கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் மோர்குழம்பு: இந்த இரண்டு காய்கறி போதும்
இப்போது கோடை காலம் என்பதால் மாங்காய்க்கு குறைவில்லாமல் இருக்கும். அதே சமயத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியம்.
ஆனால் சும்மா விளையும் மாங்காவை நம் மக்கள் விடுவார்களா? அதை வைத்து ஊறுகாய் முதல் பல ரெசிபிகளை செய்து தீர்த்து விடுவார்கள்.
இப்படி மற்றைய ரெசிபிகளை அடித்துதூக்கும் அளவில் செய்யக்கூடியது தான் மாங்காய் வெள்ளரிக்காய் மோர் குழம்பு. மாங்காய் புளியாக இருக்கும்.
தயிர் அதிலும் சுவையுடன் சேர்ந்த ஒரு புளியாக இருக்கும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம். இப்படி பல பலசுவை உள்ள ஒரு மோர்குழம்பு சாதத்தில் வைத்து சாப்பிட சூப்பரா இருக்கும்.
அந்த வகையில் நாக்கிற்கும் உடலுக்கும் பயனுள்ள மாங்காய் வெள்ளரிக்காய் மோர்குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்லாம்.
தேவையான பொருட்கள்
- தயிர் - 1 கப்
- மாங்காய் - 1/2 (துண்டுகளாக்கப்பட்டது)
- வெள்ளரிக்காய் - 1/2 (துண்டுகளாக்கப்பட்டது)
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- உப்பு - சுவைக்கேற்ப
- பச்சரிசி - 2 டீஸ்பூன் (நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
- தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு
- துருவிய தேங்காய் - 1 கப்
- பச்சை மிளகாய் - 3
- வரமிளகாய் - 3
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- இஞ்சி - 1 இன்ச்
தாளிப்பதற்கு
- தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் பச்சரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வரமிளகாய், சீரகம், இஞ்சி சேர்த்து, ஊற வைத்த அரிசியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அதில் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மோர் போன்று அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துண்டுகளாக்கப்பட்ட மாங்காய் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
மாங்காயும், வெள்ளரிக்காயும் நன்கு வேகியதும் தீயைக் குறைத்து அடித்து வைத்துள்ள மோரை ஊற்றி கிளறி, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து கிளற வேண்டம். நுரை கட்டி வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
இறுதியாக ஒரு சிறிய பாத்திரத்தில் அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மோர் குழம்பில் ஊற்றினால், சுவையான மாங்காய் வெள்ளரிக்காய் மோர் குழம்பு தயார். இதை சூடான சாத்தில் மரத்தின் நிழலில் இருந்த சா்பபிட்டால் சுவை பிரமாதம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |