தினை ஏன் அடிக்கடி சாப்பிட வேண்டும் தெரியுமா?
‘தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனச் சொல்வார்கள்.
வினையை அறுக்கிறோமோ இல்லையோ தினையைச் சாப்பிடுபவன் திடமாவான். தினையை சோறாக்கி மாவாக்கி உண்பவன் ஆரோக்கியமானவன் என்பதே உண்மை.
மற்ற தானியங்களை விட அதிக ஊட்டச்சத்து கொண்டுள்ளது. கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து கொழுப்பு மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை கொண்டுள்ளது.
எனவே இந்த தானியம் நம்முடைய உடல் வளர்ச்சி, செல் செயல்பாடுகள் மற்றும் ஆற்றலுக்கு மிகவும் அவசியம். இதிலுள்ள இரும்புச் சத்து மற்றும் காப்பர் சிவப்பு இரத்த செல்களுக்கும், ஜிங்க் ஆனது நோயெதிர்ப்பு அமைப்புக்கும் உதவுகிறது.
இந்த தினையை வைத்து பனியாரம் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
திணை அரிசி – ½ கப்
கம்பு – ¼ கப்
இட்லி அரிசி – ¼ கப்
உளுந்து - ¼ கப்
பெருங்காயம் – 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை – சிறிதளவு
வெந்தயம் – ¼ ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் – சிறிதளவு
சீரகம் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் திணை அரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊறவைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஊறவைத்த அனைத்தையும் அரைத்து சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்க வைக்கவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து மாவில் கலக்கவும்.
பின்னர் பணியாரச் சட்டியில் நெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை பணியாற குழியில் ஊற்றவும்.
பின் இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நெய் ஊற்றி எடுத்து பரிமாறினால் சுவையான கம்பு திணை பனியாரம் ரெடி.
