விமானம் புறப்படும் நேரத்தில் பயணிக்கு வந்த மெசேஜ்! கதறிய சக பயணி.. 6 மணிநேரம் நடந்த பரபரப்பு;
விமானம் ஒன்று புறப்படும் நேரத்தில் பயணி ஒருவருக்கு வந்த மெசேஜ் ஆல் விமான நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை சுமார் 11 மணியளவில் விமானம் ஒன்று மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த சமயத்தில், பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
திடீரென ஆண் பயணி ஒருவருக்கு நெருங்கிய தோழி ஒருவரிடம் இருந்து மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அது, நீ ஒரு வெடிகுண்டு என்பதை குறிப்பிட்டு, "U r da bomber" என மெசேஜ் ஒன்றை செய்துள்ளார்.
வெடிகுண்டு மெசேஜ்
இதனை அருகே இருந்த பயணி ஒருவரும் கண்டு, ஒரு நிமிடம் பதறிப்போய் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார். இதன் பின்னர், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கருதி, அதிகாரிகள் விமானத்திலும், பயணிகளையும் சோதனை செய்து பார்த்துள்ளனர்.
அப்போது, வெடிகுண்டு அல்லது ஆபத்தினை விளைவிக்கக் கூடிய பொருள் எதுவும் இல்லை என்பதும் உறுதியானது. இதுபற்றி, மெசேஜ் அனுப்பிய பயணியிடம் இது பற்றி கேட்ட போது, விளையாட்டாக தனது தோழி மெசேஜ் அனுப்பியதாக கூறி உள்ளார்.
பின்னர், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது., சுமார் ஆறு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.