சாகாவரம் கொடுக்கும் கடற்கன்னி கறி! 800 ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்த பெண்....வியக்க வைத்த ஆய்வு!
கடல் கன்னிகள் குறித்த சர்ச்சைகள் இந்த உலகில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்.
கடந்த 1736-1741களில் ஜப்பானில் பசுபிக் கடல் எல்லையில் மீனவர் வலையில் 12 இன்ச் உயரமுள்ள ஒரு வித்தியாசமான விஷயம் சிக்கியது.
அது பாதி அழுகி போன நிலையில் இருந்துள்ளது. அதை பார்க்கும் போது கடற்கன்னியின் உடல் என பலர் நம்பினார்கள்.
அதை பத்திரமாக ஒரு கோவிலில் வைத்து பாதுகாத்தார்கள். இந்நிலையில் அந்த ஜப்பானின் குராஷிக்கி அறிவியல் பல்கலைகழகம் சார்பில் இந்த கடற்கன்னியை ஆய்வுசெய்யவுள்ளனர்.
இதற்கு CT ஸ்கேன் எடுத்து இது குறித்து ஆய்வு செய்து, இது உண்மையில் கடற்கன்னிதானா அல்லது வேறுஏதாவது விஷயமாக என சோதனையிடவுள்ளனர்.
ஜப்பானை பொறுத்தவரை கடற்கன்னியை ஒரு புனிதமான விஷயமாக கருதுகின்றனர்.
கடற்கன்னியின் கறியை சாப்பிட்டால் சாகாவரம் கிடைக்கும் என நம்புகின்றனர்.
ஒரு பெண் இந்த கறியை தெரியாமல் சாப்பிட்டு 800 ஆண்டுகள் வாழ்ந்ததாக சில குறிப்புகள் இருக்கின்றன எனவும் சொல்கிறார்கள்.
சிலர் இது மனித உடல்தான் ஆனால் இதில் ஏதோ வைரஸ் தாக்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என கருதுகின்றனர்.