மீன் தொட்டிக்குள் மண்ணை அள்ளிப்போட்டு சண்டையிட்ட மீன்கள்... நம்பமுடியாத விசித்திர காட்சி
பொதுவாக மனிதர்கள் தான் அதிகமான நேரங்களில் மணலை அள்ளிவிட்டு சாபமிடுவதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு மீன்கள் அவ்வாறு செய்துள்ளது அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. தண்ணீர் தொட்டியில் இருந்த இரண்டு மீன்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ச ண் டை என்றால் நேருக்கு, நேர் மோதிக்கொள்ளும் சண்டை அல்ல.
இரண்டு மீன்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர். அந்த தொட்டிக்குள் இருந்த கடற்கரை மண்ணை வாயில் நிறைத்து வந்து ஒரு மீன், மற்றொரு மீனின் மீது துப்ப, பதிலுக்கு இன்னொரு மீனும், அதேபோல் வாயில் மண்ணைப் போ ட்டு துப்பியது.
இணையத்தில் இந்த வீடியோ வைரலாகும் நிலையில் மனிதர்களைப் போலவே மீன்களும் ஒருவர் மீது ஒருவர் மண்ணை அள்ளிப்போட்டு சாபமிடுவதாக இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.