பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக வெளியேறியது அவர் இல்லை இவராம்... வெளியே கசிந்த தகவல்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் சீசன் 5ல் நடிகர் நடிகைகள், நாட்டுப்புற கலைஞர், நாடக கலைஞர் மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே திருநங்கையான நமிதா மாரிமுத்து ஒரு சில காரணங்களால் வீட்டிலிருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அபிஷேக், சின்னப்பொண்ணு, மதுமிதா, நாடியா சங், ஆகியோர் சனிக்கிழமை எபிசோடில் காப்பாற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறுபவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய மாடலான நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடியா சங், பிக்பாஸ் வீட்டில் இருந்த கடந்த 2 வாரங்களில் பெரிதாக எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை. இதன்காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.