முடிவெட்ட சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பீதியை கிளப்பும் சிசிடிவி காணொளி
முடிவெட்டும் போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட கருவியை பயன்படுத்தும் போது தீப்பரவல் ஏற்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அறியாமையால் ஏற்பட்ட விபத்து
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் அதிகமான தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி அதன் மூலம் தங்களை அழகுப்படுத்தி கொள்கிறார்கள்
இதன்போது சிலருக்கு ஒவ்வாமை, அல்லது தொழிநுட்ப சாதனங்கள் கோளாறுகள் என ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்திருக்கும். இது போன்ற காட்சிகளை அன்றாடம் தமது சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம்.
அந்த வகையில் தலைமுடி வெட்டி கொண்டிருக்கும் போது தொழிநுட்பச் சாதனமொன்றை பயன்படுத்த முனையும் போது திடீரென குறித்த கடையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் அந்த கடையை ஏறித்து சாம்பலாக்கியதுடன், குறித்த நபருக்கும் தீ காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகளுக்கு பீதியை கிழப்பியுள்ளது.
மேலும் இதனை பார்த்த இணையவாசிகள்,“ கடைக்காரரின் அறியாமையினால் ஏற்பட்ட விபத்து” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
— Out of Context Human Race (@NoContextHumans) May 1, 2023