அத்திப்பழம் தினமும் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?
அத்திப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமாக கருதப்பட்டாலும், இவற்றினை தினமும் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அத்திப்பழம்
அதிக சத்துக்கள் கொண்ட பழங்களில் ஒன்று தான் அத்திப்பழம் ஆகும். இவை பெண்களுக்கு சிறந்ததாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை, பிசிஓடி போன்ற பிரச்சனைக்கு அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றது.
நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின் ஏ, சி, கே, பி6, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது.

ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், அழற்சியை குறைக்கவும் செய்கின்றது. இதிலுள்ள ஃபெனாலிக் அமிலம் மற்றும் பிளாவனாய்டு போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள், செல்கள் தேசமடைவதைத் தடுப்பதுடன், இதய நோய் மற்றும் நீண்ட கால் நோய்களின் அபாயத்தை குறைக்கின்றது.
நன்மைகள் என்ன?
செரிமான ஆருாக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படும் அத்திப்பழம் குடல் இயக்கத்தினை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கின்றது. இரவு நேரத்தில் 2 அல்லது 3 பழங்களை தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது சிறந்தது.
மூல நோய் பிரச்சனை, குடல் நலனை மேம்படுத்தவும் செய்கின்றது. குடல் நுண்ணுயிர் சமநிலையை மேம்படுத்தும் ஃப்ரீபயோட்டிக் பண்பினையும் கொண்டுள்ளது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலி, சோர்வு இவற்றினை குறைக்கவும், இரும்புச்சத்து ரத்த சோகையைத் தடுக்கவும், ரத்தப் போக்கு அதிகம் ஏற்படும் பெண்களுக்கு சிறந்ததாகும்.
குறைவான கலோரி கொண்டு இப்பழத்தில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துவதுடன், தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதையும் குறைக்கின்றது. எடையை குறைப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்ளவும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தவும செய்கின்றது. எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை அளிக்கின்றது.
தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தினை அளிப்பதுடன், முன்கூட்டியே வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படாமல் தடுக்கின்றது. வயதானவர்கள், பெண்கள் இதனை அளவோடு எடுத்துக் கொள்ளவும்.

அதிகமாக சாப்பிட்டால் பிரச்சனையா?
சாதாரண உடல்நிலை கொண்டவர்கள் தினமும் 2 அல்லது 3 பழங்கள் சாப்பிடலாம். ஏனெனில் அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனை, வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படும்.
இயற்கையான சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளவும்.

சிலருக்கு அத்திப்பழம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சனை, சரும அரிப்பு, வீக்கம், சுவார சிரமம் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்க்கவும்.
சிறுநீரக நோயாளிகள், பொட்டாசியம் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள் அத்திப்பழத்தினை அதிகமாக சாப்பிடக்கூடாது.

ரத்தத்தினை மெல்லியதாக்கும் மருந்து எடுத்துக் கொண்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவ ஆலோசனை பெறவும். ஏனெனில் ரத்தப்போக்கு அபாயத்தினை அதிகப்படுத்தும்.
குறைந்த ரத்த உள்ளவர்கள் அதிகமாக இப்பழத்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆக மொத்தம் அத்திப்பழத்தினை அளவோடு எடுத்துக் கொண்டால் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |