விரதம் இருப்பவர்கள் மறந்தும் இந்த தவறினை செய்திடக் கூடாதாம்! பாரிய சிக்கலை ஏற்படுத்தும்
By Manchu
விரதம் என்பது நாம் ஆயிரம் காரணத்திற்காக இருக்கலாம். ஆனால் பொதுவாக விரதம் மன அமைதிக்காகவும் சுகாதாரத்திற்காகவும் தான். மாதம் ஒரு முறை விரதம் இருப்பது நல்லது.
இதனை நம் முன்னோர்கள் உபவாசம் என்று கூறுவார்கள். சரி இப்போது விரதம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- விரதம் பிடிக்கும் முந்தைய நாள் வீடு முழுவதும் சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து விட வேண்டும்.
- விரதம் இருப்பது ஆணாக இருந்தால் குடும்பத்தினரின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். பெண்ணாக இருந்தால் பெற்றோர் அனுமதி பெற்று செய்ய வேண்டும். திருமணமான பெண்கள் மாமியார் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.
- குழந்தை பிறந்து 48 நாட்கள் கழித்து தான் பெண்கள் விரதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
- மாதவிலக்கு முடிந்த ஏழு நாட்கள் கழித்து தான் பெண்கள் விரதம் இருக்க வேண்டும்.
- குடும்பம் யாரேனும் தவறிவிட்டால் மூன்று மாதங்கள் கழித்து தான் விரதம் இருக்க வேண்டும்.
- விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபம் கொள்வது, தவறாக பேசுவது, பிறரை கேலி கிண்டல் செய்வது மற்றும் பேசாமல் இருப்பது அல்லது அதிகம் பேசுவது இவையெல்லாம் கூடாது. இல்லையென்றால் விரதம் பலன் தராது.
- விரதத்தின் போது அசைய உணவு சாப்பிடுவது சமைப்பது கூடாது. மேலும் வெற்றிலை பாக்கு போடுவது, சூதாட்டம், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவது எதுவும் கூடாது.
- விரதத்தை காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அதிக நேரம் பகல் உறக்கம் கூடாது. அதிக நீராகாரம் குடிக்க கூடாது. முழு நேர இறை வழிபாடு அவசியம்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US