பிரபல நடிகை தீபாவின் ஐபோன் மீட்பு: திரைக்கு வரும் மர்மங்கள்!
சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பவுலின் ஜெசிகா என்கிற தீபாவின் ஐபோன் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தற்கொலைச் செய்து கொண்ட தீபா, காதல் தோல்வியால் இந்த முடிவுக்கு வந்ததாக சமூக வலையத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
தற்போது மீட்கபட்ட ஐபோன் தீபாவின் காதலனின் நண்பரான பிரபாகரனிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்திய கோயம்பேடு போலீசார் தீபா பயன்படுத்திய மூன்று செல்ஃபோன்களும், ஒரு டேப் மீட்கப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளனர்.
வசமாக சிக்கிய சிராஜீதீன் நண்பர்
மீட்கப்பட்ட ஐபோனில் தகவல்களோ, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அழிக்கபட்டுள்ளதா? என்பதனை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பிரபாகரனிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை செய்ததில், தீபாவின் காதலனாகிய சிராஜீதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து சென்றதாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை தீபா,சிராஜீதீனுடன் ஏற்பட்ட வாக்குவாத்தினால் தம்மை தீபாவிடம் பேசுமாறு சிராஜீதீன் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தீபா தற்கொலை செய்து கொண்ட வீட்டிலிருந்து சில நகைகளும் காணாமல் போனதாகவும் விசாரணையில் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.