தீவிர உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்துமா?
தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டால் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது என்பது உண்மையா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சியால் மாரடைப்பு
இன்றைய காலத்தில் இளம் வயதில் மாரடைப்பு என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட மாரடைப்பு ஏற்பட்டுவிடுகின்றது.
சாதாரணமாக இருந்து கொண்டிருக்கும் போது கடினமான உடற்பயிற்சியினை அதிக நேரம் செய்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சீரற்ற இதயத் துடிப்பு அல்லது இதயத் தசை பலவீனம் உள்ளவர்கள் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது மாரடைப்பும் வருமாம்.
ஏனெனில் தீவிர உடற்பயிற்சியின் போது இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் சுரப்பு அதிகரிக்கின்றது. இதனால் ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பு, வெடித்து ரத்த குழாய்களை முழுமையாக அடைத்து மாரடைப்பு ஏற்படுகின்றது.
கடினமான பயிற்சிகளின்போது, பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் உடலில் கூடியோ, குறைந்தோ சமநிலையை இழக்கும் போது, இதயத்தை பாதித்து உடனடியாக மாரடைப்பு ஏற்படலாம்.
ஆகவே கடினமான உடற்பயிற்சியினை மெதுவாகத் தொடங்கி பின்பு படிப்படியாக நேரத்தினை அதிகரிக்க வேண்டுமாம். மேலும் பயிற்சிக்கு முன்பு வார்ம் அப் செய்வது முக்கியமாகும்.
பயிற்சிக்கு முன்னும் பின்னும், இடையிலும் நீர் அருந்தி, உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும்.
பயிற்சியின்போது நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், மயக்கம், அதிக வியர்வை, தோள்பட்டை, இடது கை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்திவிட்டு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
