இந்த நாட்டுக்கு சென்றால் தயவு செய்து உப்பை மட்டும் கேட்டுடாதீங்க.... அப்புறம் அவ்வளவு தான்!
உப்பு உணவின் சுவையை மட்டும் இல்லை மனிதர்களை தீய திருஷ்டியிலிருந்து காக்கிறது என்பதும் மக்களின் நம்பிக்கை.
இது இந்தியாவில் வாழும் தமிழ் மக்களிடம் பரவலாக காணப்படும் நம்பிக்கை.
இது போலவே வெவ்வேறு நாடுகளிலும் புதிய சம்பிரதாயம் காணப்படுகின்றது.
உப்புக்கும் தமிழர் பாரம்பரியத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதை போலவே எகிப்து நாட்டிலும் விசித்திரமான பழக்கம் ஒன்று உள்ளதாம்.

எகிப்து நாட்டு கலாச்சாரப்படி அந்நாட்டில் ஒருவர் வீட்டிற்கு விருந்தினராக சென்றால் அவர்கள் சாப்பிடும் போது உப்பு கேட்பதோ போட்டுக்கொள்வதோ விருந்துக்கு சென்ற இடத்தை அவமானப்படுத்துவதாக கருதப்படுமாம்.
அதாவது விருந்திற்கு வந்தவர்களை சரியாக உணவளிக்காமல் விட்டுவிட்டார்கள் என அர்த்தமாம்.
இதனால் எகிப்து நாட்டில் யார் வீட்டிற்கு விருந்தினர் சென்றாலும் உணவில் உப்பு இல்லை என்றாலும் உப்பை கேட்டு வாங்க மாட்டார்களாம். ஆனால் எகிப்து நாட்டில் உள்ள பல பழக்க வழக்கங்கள் இந்தியாவின் பழக்க வழக்கங்களை ஒத்து இருக்கின்றது.
அந்நாட்டில் ஒருவர் வீட்டிற்குள் செல்லும் போது செருப்பை வாசலிலேயே கழட்டி விடுகின்றனர். விருந்தினர்களாக செல்லும் போது கட்டாயம் ஏதாவது பரிசு வாங்கி செல்கின்றனர்.
இந்த பழக்கம் எல்லாம் இந்தியாவிலும் இருக்கிறது.
இனி எகிப்துக்கு யாராவது விருந்தினராக சென்றால் உப்பை மட்டும் கேட்டு வாங்கி சாப்பிட்டுட வேண்டாம்.