Ethirneechal: போனை தர்றேன் தர்றேன் என கதறிய அறிவுக்கரசி.... மாஸ் காட்டிய பெண்களுக்கு இப்படியொரு ஏமாற்றமா?
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசியினை வீட்டு மருமகள்கள் போனை வாங்குவதற்கு பயங்கரமாக அடித்து துவைத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
குணசேகரன் ஈஸ்வரியை அடித்து மருத்துவமனையில் படுக்க வைத்துள்ள நிலையில், இதற்கான காரணம் தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
ஆனால் குணசேகரன் ஜனனியை குற்றவாளியாக்கி அவரை கைது செய்யவும் வைத்துள்ளார். ஆனால் ஜாமீனில் தற்போது வெளிவந்துள்ளார்.
தற்போது அறிவுக்கரசியிடம் ஆதாரம் இருப்பதை மோப்பம் பிடித்த மருமகள்கள் அதனை எடுப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் அனைத்து நேரத்தில் அறிவுக்கரசி எஸ்கேப் ஆகியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறிவுக்கரசியை வலையை போட்டு மடக்கி பிடிப்பது போன்று வீட்டு பெண்கள் பிடித்துள்ளனர். மேலும் அடித்து விளாசவும் செய்துள்ளனர்.
கடைசியாக போனை கொடுத்துவிடுவதாக கூறி அறிவுக்கரசி செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம் போனை தூக்கி குணசேகரன் வரும் நேரத்தில் வாசலில் வீசிவிடுகின்றார். இதனால் போன் உடைந்துவிடுகின்றது.
எப்பொழுதும் கெத்து காட்டிக் கொண்டிருக்கும் அறிவுக்கரசியை இவ்வாறு அடித்து துவைப்பதை அவதானிக்கும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை அடக்கமுடியாமல் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |