Ethirneechal: லாட்ஜில் தங்கிய பெண்களுக்கு அரங்கேறும் தொல்லை... சக்திக்கு புதிய ஜோடியா?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், பெண்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறி லாட்ஜ் ஒன்றில் தற்போது தங்கியுள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருகின்றனர்.
சிறையிலிருந்த குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், இதனை விரும்பாத பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
தங்குவதற்கு வீடு இன்னும் கிடைக்காததால், லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்பொழுது குடித்துவிட்டு நபர் ஒருவர் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றார்.
சக்தி புதிதாக பெண் ஒருவரை சந்தித்துள்ளார். இப்பெண் மூலமாக சக்தியின் வாழ்க்கைக்கு எதுவும் பிரச்சனை எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |