Ethirneechal: வார்த்தையால் விஷத்தை கக்கிய மாமியார்... மயங்கி விழுந்த ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் சென்றதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று மாமியார் விசாலாட்சி வார்த்தையில் விஷத்தை கக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
சமீபத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டு வீட்டு பெண்களை ஹோட்டல் தொழில் செய்வதற்கு குணசேகரன் சம்மதித்தார்.
ஆனால் சில தினங்களில் தர்ஷன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அறிவுக்கரசியிடமிருந்து எஸ்கேப் ஆகவும் செய்துள்ளார்.
இதனால் உச்சக்கட்ட கோபத்தில் காணப்படும் அறிவுக்கரசி, தர்ஷனை கண்டுபிடித்து தீர்த்து கட்ட தேடி வருகின்றார்.
மற்றொரு புறம் குணசேகரன் வீட்டில் தர்ஷன் எஸ்கேப் ஆகியதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று வீட்டில் அனைவரும் அவரை வார்த்தையால் சித்ரவதை செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மாமியாரின் வார்த்தையைக் கேட்டு மனம் வருத்தப்பட்ட ஈஸ்வரி மயங்கி விழுந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |