Ethirneechal: விசாலாட்சியின் கசப்பான காதல் கதை! ஜனனியின் ஹோட்டலுக்கு ஏற்பட்ட ஆபத்து
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி ஹோட்டலுக்கு செய்து வைத்திருக்கும் சாப்பாட்டில் கலப்படம் செய்வதற்கு அறிவுக்கரசி அவளது அண்ணனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுத்த குடைச்சல்களை தகர்த்து எரிந்து வீட்டு பெண்கள், தற்போது வெற்றிகரமாக ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.

ஜனனிக்கு ஆதரவாக கலெக்டர் ஒருவரும் உள்ள நிலையில், குணசேகரன் கலெக்டரை வைத்தே ஜனனிக்கு குடைச்சல் கொடுக்க ஏற்பாடு செய்கின்றார்.
ஆனால் எதுவும் பலிக்காத நிலையில், தற்போது அறிவுக்கரசி மற்றும் அவரது அண்ணன் திட்டமிட்டுள்ளனர். அதாவது சமைத்து வைத்திருக்கும் உணவிற்கு அருகில் விசாலாட்சி உள்ள நிலையில், அவரை வெளியே வரவழைத்துள்ளனர்.
பின்பு யாரும் இல்லாத தருணத்தில் சமையலறைக்கு சென்று அதில் எதையோ போடுவதற்கு பிளான் செய்துள்ளார். ஆனால் அத்தருணத்தில் ஜனனி உள்ளே நுழைந்ததுடன், அவருக்கு சந்தேகமும் எழுந்துள்ளது.
இதனால் ஹோட்டல் தொழிலில் ஜனனிக்கு சிக்கல் ஏற்படுமா? அறிவுக்கரசி செய்ய வந்த காரியத்தை முடித்துவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |