மகளை தொலைத்து விட்டு தேடி அலையும் ரேணுகா.. வெளியில் வரும் குணசேகரன்
ஞானத்தின் முகத்திரையை கிழித்த ரேனுகாவின் செயல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.
காணாமல் போன ஐஸ்வர்யா
இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டு குணசேகரன் தர்ஷாவுக்கு சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இதில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஈஸ்வரிக்கு எதிராக தர்ஷா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார்.
தர்ஷாவுக்கு ஒரு காதல் இருப்பது போன்று கடந்த எபிசோட்களில் காட்டப்பட்டது. ஆனாலும் திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறார். இந்த திருமண வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கதிர் சொத்துக்களை விற்று அதனை காசு பார்க்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறார்.
தர்ஷாவுக்கு சம்பந்தம் செய்யும் குடும்பத்தினர் குணசேகரனை வெளியில் கொண்டு வர வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியொரு நிலையில், ரேனுகாவின் மகள் ஐஸ்வர்யா காணாமல் போயுள்ளார். இதனால் வீட்டிலுள்ளவர்கள் அலைந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன தான் முயற்சி செய்தாலும் குணசேகரன் வெளியில் வருவதை தடுக்க முடியாது என வழக்கில் கூறியுள்ளார். இதனால் ஈஸ்வரிக்கும், தர்ஷினிக்கும் பரபரப்பு அதிகமாகியுள்ளது. இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |