Ethirneechal: புட்டு புட்டு வைக்கும் சாமியார்.. திணறும் கதிர்- ஜனனியின் ஆட்டம் ஆரம்பம்
குணசேகரன் சாதகமாக பேச வந்த சாமியார், குணசேகரன் வீட்டிலுள்ளவர்கள் செய்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.
இது தெரியாத குணசேகரன் ஜீவானந்தம், பார்கவி இருவரையும் கொலைச் செய்வதற்காக போலீஸ்க்காரர்களை அவர் இருக்கும் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள்.
உண்மையை அவிழ்த்த ஜோதிடர்
இந்த நிலையில், தர்ஷன்- பார்கவி திருமணத்திற்காக வந்த ஜோதிடர் குணசேகரன் வீட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பவைகளை புட்டு புட்டு வைக்கிறார்.
அத்துடன் நிறுத்தாமல் இரண்டு ஜீவன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது என்றும் குணசேகரனின் திட்டம் பற்றியும் கூறுகிறார்.
மேலும், கதிர் குணசேகரனை ஏமாற்றி சொத்தில் களவு செய்தவற்றையும் குறித்த ஜோதிடர் கூறி விடுகிறார். இதனால் கடுப்பான கதிர் ஜோதிடரை அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் அனுப்புகிறார்.
இந்த சண்டையில் பார்கவி, ஜீவானந்தம் உயிர் காப்பாற்றப்படுமா? அல்லது இவர்களின் சண்டையை பயன்படுத்தி அறிவுக்கரசி விளையாடி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |