கூண்டுடன் சிக்கிய குணசேகரன்.. சரமாறிய தாக்கிய தர்ஷினி- அடுத்து நடக்கப்போவது என்ன?
இவ்வளவ நாட்களாக போராடிய ஜனனியின் கனவுகளை அழிக்க நினைத்த குணசேகரன் வைத்த ஆளை தர்ஷினி கட்டையால் அடித்து ஓடவிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, இரண்டாவது பாகத்தையும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னால் முடிந்தளவு பெண்களை அடிமைகளாக வைத்திருக்க நினைத்த குணசேகரன் வாழ்க்கையில் பெரிய புயலாக தேவகி கதை மாறியுள்ளது.
சக்தி தான் ராணா என்கிற சந்தேகத்தை கதைக்களம் துண்டியது. ஆனால் சக்தி மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் குணசேகரன் அவருடைய தம்பிகளுடன் தலைமறைவாக இருக்கிறார்கள்.

ஜனனி இதுவரையில் குணசேகரன் மீது ஏகப்பட்ட புகார்களை கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வசமாக சிக்கிய அறிவுக்கரசி
இந்த நிலையில், முதல் தடவையாக குணசேகரனுக்கு எதிராக திரும்பிய விசாலாட்சி வீட்டிலுள்ள மருமகள்களின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் அறிவுக்கரசி மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் குணசேகரன் நந்தினி ஆரம்பித்திருக்கும் தள்ளுவண்டி உணவகத்தை கொளுத்தி விடுமாறு கூறுகிறார். இதனால் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிய பின்னர், முல்லை பெற்றோலூடன் வண்டியின் அருகே செல்லும் பொழுது, அந்த சமயம் பார்த்து தர்ஷினி அங்கே வந்து விடுகிறார்.

முல்லையை பெற்றோலூடன் பார்த்த பொழுது கட்டையால் ஓட ஓட அடிக்கிறார். முல்லையின் சத்தம் கேட்டு ஜனனியுடன் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் ஓடி வருகிறார்கள்.
வசமாக சிக்கிய அறிவுக்கரசி இதற்கு என்ன பதில் கொடுப்பார் என்பதை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |