உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. பார்கவியின் புது பிளான்- பதைபதைக்கும் கதையின் திருப்பம்
தர்ஷன் திருமணத்துக்கு பயந்து தப்பிச் சென்றதால், ஈஸ்வரியை வீட்டிலுள்ள மாமியார் தரம்குறைவாக பேசியதை கேட்ட ஈஸ்வரி சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக கதையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அறிவுக்கரசியின் தங்கையை எப்படியாவது மகனுக்கு திருமணம் செய்து வைத்து வீட்டிலுள்ள பெண்களை வெற்றிப் பெற வேண்டும் என குணசேகரனும் அவருடைய தம்பிகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னுடைய விருப்பத்திற்காக அப்பாவை எதிர்க்க முடியாத தர்ஷன் திருமணத்தை திருத்துவதற்காக வீட்டிலிருந்து தப்பி ஓடி விடுகிறார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் வீட்டிலுள்ளவர்களும், அறிவுக்கரசியின் ஆட்களும் வெறித்தனமாக தர்ஷனை தேடி வருகிறார்கள்.
சுய நினைவு இல்லாமல் கிடக்கும் ஈஸ்வரி
இந்த நிலையில், ஊரை விட்டு ஓடி வந்த தர்ஷன் ஒரு இடத்தில் கலைப்புடன் அமர்ந்திருக்கிறார். ஆனால் இவருக்கு பார்கவி தான் உதவி செய்கிறார் என்ற விடயம் யாருக்கும் தெரியாது.
இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், விசாலாட்சி ஈஸ்வரியை தரம் குறைவாக பேசி, ஜீவானந்தம் தான் தர்ஷனை கடத்தி வைத்திருக்கிறார் எனக் கூறுகிறார்.
அத்துடன் கடந்த 6 மாதங்களாக ஈஸ்வரி, ஜீவானந்தத்துடன் இருந்த காரணத்தினால் அவர் மீதுள்ள பாசம் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். தன்னுடைய மாமியாருக்காக வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை அவர் இப்படி அசிங்கப்படுத்தியது தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மயங்கி சுய நினைவு இல்லாமல் கிடக்கிறார். இது பற்றிய ஜனனி குணசேகரனிடம் கூறிய பொழுது,“ இது என்ன புது நாடகமா?” என அதையும் அலட்சியமாக பேசுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
