Ethirneechal: ஜீவானந்தத்திடம் தஞ்சமடைந்த தர்ஷன்... சூடுபிடிக்கும் கதைகளம்
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி மட்டுமின்றி தற்போது தர்ஷனும் ஜீவானந்தத்திடம் தஞ்சமடைந்துள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மற்றொரு புறம் வீட்டு பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவுக்கரசியின் பாதுகாப்பில் இருந்த தர்ஷன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி கொடைக்கானல் சென்றுள்ளார். பார்கவி மற்றும் தந்தையும் கொடைக்கானல் சென்றுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் எதிர்பாராமல் சந்தித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்திடம் தஞ்சமடைந்த தர்ஷன் அவருடன் எஸ்கேப் ஆகியுள்ளார். ஏற்கனவே வீட்டில் இவ்வாறு கற்பனை செய்து தான் ஈஸ்வரியை கொடுமை செய்துள்ள நிலையில், தற்போது அதே போன்று தான் அரங்கேறியுள்ளது.
உண்மை அறியாமல் குணசேகரன் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும். கையில் கிடைக்கும் தர்ஷனை அறிவுக்கரசி என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
