ஜெயிலுக்கு போகும் குணசேகரன்.. கொளுந்து விட்டு எரியும் அறிவுகரசி- சமாளிப்பார்களா?
குணசேகரன் ஜெயிலுக்கு போகும் இந்த சமயத்தில், தர்ஷன் திருமணம் வழக்கில் ஜெயிலுக்கு சென்ற அறிவுகரசி மீண்டும் வெளியில் வந்து வேலையை ஆரம்பித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது. படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது.
ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
எப்படியாவது வீட்டிலுள்ளவர்களை மணி விழாவில் பிரிக்கலாம் என காத்திருந்த குணசேகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜனனி குணசேகரன் செய்தது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இறுதி நாள் அவரின் வேலையை காட்டியுள்ளார்.
கொந்தளிப்பில் அறிவுகரசி
இந்த நிலையில், பிணையில் வெளிவந்த குணசேகரனின் காலம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் ஜெயிலுக்குள் மீண்டும் செல்லப்போவதாக தம்பிகளிடம் கூறி வேதனைப்படுகிறார். அதில் சக்திக்கு அண்ணன் இல்லாத காரணத்தினால் அழுகையை அடக்க முடியவில்லை.
இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், தர்ஷன் காதலியை அடித்து கொல்லச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அறிவுகரசி மீண்டும் வெளியில் வந்து திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என வெறியுடன் இருக்கிறார்.
மணி விழாவை நிறுத்தியதால் ஈஸ்வரியை விசாலாட்சி வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிறார். “நீ இனி இந்த வீட்டுக்குள் யாரும் இல்லை. பிள்ளைகளுக்கு அம்மா மாத்திரம் தான்..” எனக் கூறுகிறார்.
மணி விழா நின்ற காரணத்தினால் ஈஸ்வரியை ஆளுக்கு ஆள் ஒதுக்குகிறார்கள். அவர் அதிலிருந்து எப்படி வெளியில் வருவார் என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |