Ethirneechal: சக்தி கையில் சிக்கிய மொட்டை கடதாசி.. அம்பலமாகும் குணசேகரனின் இன்னொரு முகம்
யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சக்தி குணசேகரன் வீட்டிற்கு சென்ற போது குணசேகரன் இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருக்கும் சொத்து விவகாரம் வெளியில் வந்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுக்க, அதற்கு சக்தி வைத்தியம் செய்து தர்ஷனனை சுய நினைவுக்கு கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய காதலுக்காக உயிரை பணயம் வைத்திருக்கும் பார்கவி, ஜீவானந்தம் உதவியுடன் மண்டபத்திற்கு அருகில் வந்து விடுகிறார். அசந்த நேரத்தில் மருமகள்கள் தன்னுடைய திட்டத்தை நடத்தி விடுவார்கள் என குணசேகரன், கதிர் இருவரும் உஷாராகவே இருக்கிறார்கள்.
சக்தி கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்
இது ஒரு புறம் இருக்கையில், நலங்கை பூர்த்தி தர்ஷன் வெளியில் செல்லலாம் இருப்பதற்காக வீட்டிலுள்ளவர்கள் காவலாக இருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சக்தி, குணசேகரன் வீட்டிலுள்ள அறைக்குள் சென்று அவர் வைத்திருக்கும் ரகசியங்களை திறந்து பார்க்க ஆரம்பிக்கிறார். அதில், சில பத்திரங்களும் கடதாசி ஒன்றும் சக்தியின் கைக்கு கிடைக்கிறது. அதனை பிரித்து பார்க்கும் பொழுது குணசேகரன் இவ்வளவு நாட்களாக ஆடிய நாடகம் வெளியில் வருகிறது.
இந்த விடயத்தை வெளியில் கூறி சக்தி திருமணத்தை நிறுத்துவாரா? என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |