Ethirneechal: வசமாக சிக்கிய அறிவுக்கரிசி.. உண்மையறியும் குடும்பத்தினர்
இவ்வளவு நாட்களாக மயக்கத்தில் இருந்த தர்ஷன் கண்விழித்துள்ளார். இது எதனால் நடந்தது என வீட்டிலுள்ளவர்கள் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து ஜனனியை ஒருவழியாக இந்த விவாகரத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போன்று ஜனனி வெளியில் வந்து விட்டார்.
அதன் பின்னர் வீட்டில் தான் ஈஸ்வரிக்கு ஏதோ நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை சேகரிக்க போராடினார். அப்போது அறிவுக்கரசி கையில் இருந்த தொலைபேசி சிக்கியது.
வசமாக சிக்கிய அறிவுக்கரசி
இந்த நிலையில், தர்ஷனுக்கு எதோ மருந்து கொடுத்து மயக்கமடைய செய்து விட்டு தற்போது அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்க இரண்டு நாட்களுக்கு முன்னரே மண்டபத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
“தர்ஷனனுக்கு என்ன நடந்தது அவன் ஏன் இப்படி இருக்கிறான்?” என சக்தி ஒரு பக்கம் சண்டைக்கு செல்ல கதிரும் அறிவுக்கரசியும் இணைந்து ஜீவானந்தம் மற்றும் பார்கவியை கொலைச் செய்ய போடுகிறார்கள்.
வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் போலீஸ் அதிகாரி, ட்ரோன் கமெராக்களை பயன்படுத்தி, அவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என சோதிக்கிறார்.
இதற்கிடையில் தர்ஷனனுக்கு உணவில் மருந்து கலந்து கொண்டிருப்பது மருத்துவர் வழியாக தெரியவந்துள்ளது. இதனால் வீட்டிலுள்ளவர்கள் அறிவுக்கரிசி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |