Ethirneechal: குணசேகரனிடம் கெஞ்சும் அறிவுக்கரசி.. சொந்த வீராப்புக்காக காலை வாரிய தருணம்
குணசேகரன் திருமணம் நடக்கப்போகிறது என மிதப்பில் இருந்த போது, அறிவுக்கரசி செய்த கொலை பற்றிய தகவல்கள் வெளியில் வர, இந்த சம்பவம் வீட்டிலுள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுக்க, அதற்கு சக்தி வைத்தியம் செய்து தர்ஷனனை சுய நினைவுக்கு கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய காதலுக்காக உயிரை பணயம் வைத்திருக்கும் பார்கவி, ஜீவானந்தம் உதவியுடன் மண்டபத்திற்கு அருகில் வந்து விடுகிறார். அசந்த நேரத்தில் மருமகள்கள் தன்னுடைய திட்டத்தை நடத்தி விடுவார்கள் என குணசேகரன், கதிர் இருவரும் உஷாராகவே இருக்கிறார்கள்.
கைதாகும் அறிவுக்கரசி
இது ஒரு புறம் இருக்கையில், மணமேடையில் தன்னுடைய வருங்கால மனைவியாக வரப்போகும் அன்புக்கரிசியும் தர்ஷன் பக்கத்தில் மணக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார். காதலியை கரம்பிடிக்க முடியவில்லை என தர்ஷன் ஒரு பக்கம் கவலையுடன் இருக்கையில், குணசேகரனை தேடி மண்டபத்திற்கு காவல்துறையினர் வருகிறார்கள்.
அப்போது அறிவுக்கரசி, “ நான் கொலைச் செய்தேன். ஆனால் அதையும் நான் குணசேகரனுக்காக தான் செய்தேன்..” என அறிவுக்கரசி மொத்தமாக கோர்த்து விடுகிறார். தனக்காக இவ்வளவு நாட்களாக உடன் இருந்த அறிவுக்கரசியை குணசேகரன் காப்பாற்றுவாரா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |