குணசேகரன் ரகசியம் காப்பது ஏன்? ஆபத்தில் சக்தி- மாறுபடும் கதைக்களம்
எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வீட்டிலுள்ளவர்களிடம் ஒரு முக்கியமான ரகசியத்தை மறைத்து வைக்கிறார். இதனை கண்டுபிடிப்பதற்காக போராடும் சக்தியை கொலைச் செய்யும் முடிவில் குணசேகரன் இருக்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தற்போது இரண்டாவது பாகம் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் தர்ஷன்- பார்கவி இருவருக்கும் மருமகள்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ள நிலையில், குணசேகரன் தோல்வியை சந்தித்துள்ளார்.
இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த குணசேகரன் தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். வந்ததும் தனது ஆட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.

ஆபத்தில் சக்தி
இந்த நிலையில், ஜனனியிடம் இருக்கும் ஆதாரங்களை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என வீட்டிலுள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவர் துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்து, “ இன்னும் 15 நாட்களில் அனைத்து பிரச்சினையையும் முடிவுக்கு வரும்..” என பொடி வைத்து பேசுகிறார்.
இதனை தொடர்ந்து வீட்டு விட்டு சக்தி வெளியேறிய சக்தி, குணசேகரன் பற்றிய ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறார். சக்திக்கு கிடைத்த கடிதத்தில் உள்ள முகவரியை வைத்து குணசேகரன் குடும்பத்திற்கு சாபம் கொடுத்த பெண்ணை தேடி செல்கிறார்.

தேவகி எங்கிருக்கிறார்?
மடங்களில் தேவகி இருப்பதாக போஸ்ட் மாஸ்டர் கூறியதை கேட்டு வெளியில் வரும் சக்தியை கொலைச் செய்வதற்காக குணசேகரன் அனுப்பிய ஆள் காத்திருக்கிறார்.
இந்த தடவை தன்னை யாரும் நெருங்கி விடக் கூடாது என்பதில் குணசேகரன் உறுதியாக இருக்கிறார். நடப்பது என்னவென தெரியாமல் கதிரும், ஞானமும் வீட்டில் குணசேகரன் பேச்சைக் கேட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |