Ethirneechal: ரகசியத்தை அறிந்த சக்திக்கு நேர்ந்த துயரம்! கடத்திச் சென்ற மர்ம கும்பல் யார்?
எதிர்நீச்சல் சீரியலில் ரகசியத்தை அறிந்து கொண்டு வீடு திரும்பிய சக்தியை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது..
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற பெயரில் வெளியாகி வருகின்றது.
தற்போது குறித்த சீரியலில் கதைகளம் வித்தியாசமாக செல்கின்றது. சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்த சீரியலில் பல அதிரடியாக டுவிஸ்ட்கள் அரங்கேறியுள்ளது.
சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மையினை தெரிந்து கொண்ட நிலையில், குணசேகரன் சக்தியை தீர்த்து கட்டுவதற்கு விடாமல் துரத்திக் கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் சக்தி கால்நடையாக நடந்து வந்து கொண்டிருக்கும் தருணத்தில், எதிரே கார் ஒன்று வரவே இருள் சூழ்ந்த அந்த பகுதியில் வைத்து சக்தி மர்ம கும்பலால் கடத்தி செல்லப்பட்டார்.

சக்தியை கடத்தியது குணசேகரன் அனுப்பிய ஆட்கள் மாதிரி தெரியாத நிலையில், ஒருவேளை ராணாவின் ஆட்களாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் குணசேகரனின் வீட்டை கேட்டு வந்தவர் கூட ராணாவின் ஆட்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |