Ethirneechal: குணசேகரன் வீட்டிற்கே வந்து நின்ற குந்தகை... தலைகுனிந்து நிற்கும் சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் சக்திக்கு தோழி என்ற பெயரில் உதவி செய்து வரும் குந்தகை நேரடியாக குணசேகரன் வீட்டிற்கே வந்து நின்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தொழிலில் சாதிக்க துடிக்கின்றனர். குணசேகரன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
வாடகைக்கு சென்ற வீட்டிலிருந்தும் வீட்டின் உரிமையாளர் அவர்களை கிளம்புவதற்கு கூறியுள்ளார். இந்நிலையில் தர்ஷனின் திருமணத்தை வைத்து அறிவுக்கரசி குள்ளநரி வேலை செய்து வருகின்றார்.
இதுவரை ஜனனிக்கு ஆதரவாக இருந்த சக்தி தற்போது அவரை விட்டு பிரிந்துள்ள நிலையில், குந்தகை என்ற பெண்ணுடன் பழகி வருகின்றார். இந்நிலையில் குறித்த பெண் குணசேகரன் வீட்டிற்கே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
