Ethirneechal: விவாகரத்திற்கு நந்தினி வைத்த கண்டிஷன்! ஆடிப்போன குணசேகரன் கூட்டணி
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி விவாகரத்திற்கு வைத்துள்ள ஒற்றை கண்டிஷன் குணசேகரன் கூட்டணியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்துள்ள நிலையில், கதிர் ஞானம் அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ரேணுகா, நந்தினி இருவரும் கணவரை விவாகரத்து செய்வதற்கு துணிந்துள்ளனர்.
ஆனால் ஒரு கண்டிஷனைப் போட்டு குணசேகரன் கூட்டணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். இதுவரை தங்களை கொடுமை செய்து அடிமையாக வைத்ததற்கு சொத்திலிருந்து 20 சதவீதம் எங்களுக்கு வேண்டும் என்று நந்தினி கேட்டுள்ளார்.
இதனால் கதிர் ஞானம் இருவரும் எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர். மற்றொரு புறம் ஜனனியைக் பாஸ்கர் காப்பாற்றியுள்ள நிலையில், அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகின்றனர்.
மேலும் மாமியார் விசாலாட்சிக்கு நந்தினி ஜனனி மீண்டு வருவாள் என்று ஆறுதல் கூறி வருகின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |