Ethirneechal: அரிவாளுடன் சீறிய நந்தினி காலில் விழுந்து கதறிய சோகம்! கண்டுகொள்ளாத கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் தனது மகளின் சடங்குக்கு முறை செய்வதில் நந்தினி தனது உடன்பிறந்த தம்பியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், சீர் செய்வதற்கு நந்தினியின் தம்பியை வரவிடாமல் அறிவுக்கரசி தடுத்து வைத்துள்ளார்.
தற்போது அறிவுக்கரசி தனது அண்ணனை வைத்து சடங்கு செய்வதற்கு காய் நகர்த்தி வரும் நிலையில், நந்தினி காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.
ஆனால் குடும்பத்தினர் யாரும் கண்டுகொள்ளாமல் தாராவிற்கு சடங்கு செய்வதற்கு தயாராகியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |