Ethirneechal: பயந்து நடுங்கும் நந்தினி... குணசேகரன் திட்டம் என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் வெளியில் பார்ட்டி வைத்து ஆட்டம் போட்ட பெண்களை வீட்டில் யாரும் ஒன்றும் சத்தம் போடாமல் அமைதியாக இருந்துள்ள நிலையில், நந்தினி பயத்தில் வாயடைத்து காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலில் பெண்கள் மீண்டும் ஆணாதிக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
வீட்டில் தாராவிற்கு சடங்கு ஏற்பாடு செய்து மிகப்பெரிய பிரச்சனையைக் கொண்டு வந்து தடுக்க கதிர் முயற்சி செய்தார்.
ஆனால் இவற்றினை தவிடுபொடியாக்கி சடங்கு நிகழ்ச்சியினை நந்தினி செய்துள்ளார். மேலும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஜனனி பார்ட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பார்ட்டியில் குடும்ப பெண்கள் அனைவரும் ஆட்டம் போட்டுள்ள நிலையில், இதனை கரிகாலன் காணொளியாக எடுத்து குணசேகரன் மற்றும் தம்பிகளிடம் காட்டியுள்ளார்.
இதனால் அனைவரும் வீட்டு பெண்கள் மீது கடும் கோபத்தில் இருந்தும் தற்போது எந்தவொரு கேள்வியும் கேட்காமல் இருக்கின்றனர். இதனால் நந்தினி தனது பயத்தினை வெளிக்காட்டாமல் அனைவருக்கும் காபி கொடுக்கின்றார்.
மற்றொரு புறம் தர்ஷன் மீண்டும் பார்கவியிடம் பேசி வருகின்றார். தர்ஷனின் இந்த மாற்றத்தினை அறிவுக்கரசியின் கூட்டம் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |