Ethirneechal: கரிகாலனை பளார் என அறைந்த நந்தினி... பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்
எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனை நந்தினி பளார் என அறைந்துள்ளது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்யும் நிலையில், கரிகாலன் மாமன் முறை என்று பேசியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு நந்தினி சென்றுள்ளார்.
கரிகாலனை பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். நந்தினியின் செயலைப் பார்த்த குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |