15 ஆண்டுகளுக்கு முன் இயக்குனராக மாரிமுத்து: வைரலாகும் புகைப்படங்கள்
15 ஆண்டுகளுக்கு முன் நடிகர் மாரிமுத்து இயக்கிய திரைப்படம் மறைந்த நடிகர் மாரிமுத்து பிரசன்னாவை வைத்து இயக்கிய கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகர் மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும், துணை இயக்குனராகவும் சினிமாவில் பலருக்கும் பிரபலமானவர்.
மேலும், இவர் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகியிருந்தார் ஏனெனில் அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் அவரின் நடிப்பு பலருக்கும் பிடித்து போக அவரின் ரசிகனாக மாறியிருக்கிறார்.
மேலும், இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாது இவர் ராஜ் கிரனிடம் உதவி இயக்குனராக இருந்து தான் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இயக்குனர், நடிகர் என்று சினிமாவில் கால்பதித்திருக்கிறார்.
தான் செய்யும் தொழிலை அதிகம் நேசித்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.
இவரின் இழப்பு சினிமா, சீரியல், ரசிகர்கள் என யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகியுள்ளது. ஏனெனில் இவரின் பேச்சும், நடிப்புத் தோரணையும் மக்களை இவர் வசம் ஆக்கியிருக்கிறது.
இந்நிலையில், அவர் 2008ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படமான கண்ணும் கண்ணும் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகின்றது.
இந்த திரைப்படத்தில் பிரசன்னா, உதயதாரா, வடிவேலு என்று பல பேரை இத்திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மாரிமுத்து.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |