Ethirneechal: வழக்கிலிருந்து வெளியேற்றப்படும் கொற்றவை... ஜனனியை சிறைக்கு அனுப்பும் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியின் கொலைபழியை ஜனனி மீது போடுவதற்கு குணசேகரன் சதி செய்யும் நிலையில், வழக்கிலிருந்து கொற்றவை வெளியேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
தர்ஷனுக்காக குணசேகரனிடம் பேச சென்ற ஈஸ்வரியை அடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஈஸ்வரிக்கு நியாயம் கிடைப்பதற்கு ஜனனி மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கொற்றவையை இவ்வழக்கிலிருந்து நீதிபதி வெளியேற்றியுள்ளார்.
தற்போது ஜனனியின் போராட்டத்தால் கொதித்தெழுந்த குணசேகரன் ஈஸ்வரியை கொலை செய்ய முயன்றது ஜனனி என்று கூறி வழக்கை திசை திருப்பப்போகின்றார்.
இதனால் கதையின் போக்கு சற்று மாறுபடுவதுடன், ஜனனி இதிலிருந்து எவ்வாறு தப்பிக்கப்போகின்றார்.... சக்தி ஜனனிக்கு துணையாக நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே குணசேகரன் ஈஸ்வரியைத் தாக்கிய காணொளியினை வைத்திருக்கும் அறிவுக்கரசியும் அமைதியாக காணப்படுகின்றார். இவர் எவ்வாறு காய் நகர்த்தப் போகின்றார் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |