Ethirneechal: சக்தி ஜனனியிடம் விசாரணை நடத்தும் கொற்றவை! ஆதாரத்தால் ஆடிப்போன குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதாரத்தை கொண்டு வந்த இளைஞரை மர்ம நபர் சுட்டுக்கொன்ற நிலையில், குணசேகரன் ஜனனியிடம் ஆதாரம் சிக்கியிருக்குமா என்று பீதியில் காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தற்போது இரண்டாவது பாகம் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் தர்ஷன் பார்கவி இருவருக்கும் மருமகள்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ள நிலையில், குணசேகரன் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த குணசேகரன் தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். வந்ததும் தனது ஆட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.
சக்தி ஜனனியிடம் ஆதாரத்தை ஒப்படைக்க வந்த இளைஞரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். இது குணசேகரனின் ஏற்பாடா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
ஆனாலும் குணசேகரன் சக்தி ஜனனியிடம் என்ன ஆதாரம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |