Ethirneechal: சக்தி போட்ட மாஸ்டர் பிளான்... கதிரின் ரகசியம் அம்பலமாகுமா?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் சொத்தை அடமானமாக வைத்து கதிர் செய்யும் தில்லுமுல்லு வேலையைக் கண்டுபிடிக்க சக்தி முயற்சி செய்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
குடும்பத்தில் தங்களது முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பினாலும், தங்களது முடிவியில் மிகவும் உறுதியாகவே பெண்கள் இருந்து வருகின்றனர்.
தற்போது குணசேகரன் சொத்து கதிரிடம் கைமாறியுள்ள நிலையில், சொத்தை அடமானம் வைத்து கதிர் வட்டிக்கு விட்டு சம்பாதித்து வருகின்றார்.
இதனை கண்டுபிடிப்பதற்கு அடுத்தடுத்து சில முயற்சிகளை செய்து வருகின்றனர். தற்போது அவர்கள் செய்துள்ள முயற்சியில் உண்மை அம்பலமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |