Ethirneechal: சொத்துக்காக அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சண்டை... ஜனனியிடம் சேர்ந்த ஹோட்டல் வண்டி
எதிர்நீச்சல் சீரியலில் ஹோட்டல் வண்டி திரும்பவும் ஜனனிக்கு கிடைத்த நிலையில், ஞானத்திடம் கதிர் சண்டை போடும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் அடிமைத்தனத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தில் கொடிகட்டி பறந்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தம்பிகளும் குணசேகரன் கூறி வார்த்தைக்கு தலைமை ஆட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜனனி கஷ்டப்பட்டு சக்தியைக் காப்பாற்றி அழைத்து வந்துள்ளார்.

மேலும் விசாலாட்சி தற்போது மருமகள்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றார் . இன்னும் இரண்டு தினங்களில் கடையை திறப்பதற்கு ஏற்பாடு செய்த நிலையில், குணசேகரன் தனது சதியால் ஜனனியின் கடையை பறிக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் இதில் அவரது திட்டம் ஒன்றும் பழிக்காமல் ஏமாற்றம் அடைந்தார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியின் அம்மா தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு வந்து கொடுக்கின்றார்.
மற்றொரு புறம் கதிர் ஞானத்திற்கு எதிராக பேசியதுடன், அவருடன் சண்டையிடவும் செய்கின்றார். ஆனால் குணசேகரன் எதவும் தெரியாதது போன்று காணப்படுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |