Ethirneechal: குணசேகரன் கேட்ட காசோலை... வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிய கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் கதிரிடம் குணசேகரன் காசோலை ஒன்றினை கையெழுத்து கேட்கும் நிலையில், கதிர் இதிலிருந்து சாமர்த்தியமாக எஸ்கேப் ஆகியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தங்களது தொழிலில் சாதிக்க துடிக்கின்றனர். தற்போது குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேறி கிளம்பியுள்ளனர்.
வாடகை வீட்டிற்கு சென்றுள்ள நான்கு பேரையும் வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்வதற்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
தற்போது குணசேகரன் ஞானம் மூலமாக சில வேலைகளை செய்துள்ள நிலையில், இதற்காக காசோலை ஒன்றினை கதிரிடம் வாங்குவதற்கு அவரைத் தேடியுள்ளார்.
ஆனால் கதிர் வேண்டுமென்றே வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். மற்றொரு புறம் ஜனனி சக்தியை பெருமையாக நினைத்து வரும் நிலையில், சக்தி வேறொரு பெண்ணிடம் பழகி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
