Ethirneechal: குணசேகரனின் சொத்தில் கதிர் செய்யும் தவறு... கண்டுபிடிக்க போராடும் சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் சொத்தை அடமானமாக வைத்து கதிர் செய்யும் தில்லுமுல்லு வேலையைக் கண்டுபிடிக்க சக்தி முயற்சி செய்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். இந்நிலையில் குணசேகரன் சொத்து கதிருக்கு கைமாறியுள்ளது. தர்ஷனுக்கு திடீர் திருமண ஏற்பாடுகளையும் குணசேகரன் செய்துள்ளார்.
தற்போது சிறையிலிருக்கும் குணசேகரனை வெளியே எடுத்தால் மட்டுமே, இந்த திருமணத்தினை நிறுத்த முடியும் என்ற முடிவிற்கு பெண்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில் கதிர் கையில் பண நடமாட்டம் அதிகமாக இருந்து வருகின்றது. கதிர் வேலைக்கு செல்லாமல் எவ்வாறு இவ்வளவு பணம் என்ற கேள்வி சக்திக்கு எழுந்துள்ளது.
ஆனால் கதிர் குணசேகரன் சொத்தை அடமானமாக வைத்து இந்த வேலைகளை செய்து வருகின்றார். இதனை கண்டுபிடிக்க சக்தி முயற்சித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |