Ethirneechal: அம்மாவை சித்ரவதை செய்து அடிதடியை ஆரம்பித்த கதிர்! கலங்கி நிற்கும் பெண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி செய்த அடுத்தடுத்த சதியை முறியடித்துள்ள நிலையில், நந்தினி கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுக்க வேண்டிய இடையூறுகளை அறிவுக்கரசி செய்து வந்த நிலையில், தற்போது கதிர் மற்றும் ஞானம் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

ஹோட்டலுக்கும் சென்று அங்கு சண்டை போட்டுள்ளனர். மேலும் வீட்டிற்கு வந்தவர்கள் விசாலாட்சியை தாய் என்றும் பாராமல் அறைக்குள் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் ஜனனி, நந்தினி தயாரித்து வைத்துள்ள மசாலா பொருட்களை வெளியே போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் ஜனனி மற்றும் நந்தினி நிலைகுலைந்து காணப்படுவதுடன், நந்தினி கொற்றவையை அழைத்து ஏதோ செய்யப் போவதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |