Ethirneechal: குணசேகரனிடம் நேருக்கு நேர் மோதும் ஜனனி.. துணை நிற்கும் சக்தி
ஈஸ்வரி விவாகரத்தில் பொறுமையை இழந்த ஜனனி, குணசேகரனிடம் நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி விட்டார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஈஸ்வரிக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை தாக்கிய குணசேகரன் எந்தவித சலனமும் இல்லாமல் வீட்டிலுள்ள மற்ற பெண்கள் மீது பழி போடுகிறார். இந்த விவாகரத்தின் விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அதற்கு தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் பரபரப்பாக தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி, குணசேகரனுக்கு தெரிந்தவர் என்பதால், விசாரணை தற்போது ஜனனி பக்கம் திரும்பியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜனனி
அவர் ஜனனியை விசாரிக்க மருத்துவமனைக்கு சென்று அவருடன் வீட்டிற்கு வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, பார்கவி ஈஸ்வரியை பார்க்க அவரது அறைக்கு சென்றது அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அதன்பின்னர் அந்த அறையில் இருந்து பார்கவியை ஜீவானந்தம் அழைத்து செல்கிறார். இதனால் ஜீவானந்தமும், பார்கவியும் தான் ஈஸ்வரியை ஏதோ செய்திருக்கிறார்கள் என பொலிஸ் சந்தேகப்படுகின்றனர்.
விசாரணை தங்கள் பக்கம் திரும்ப என்ன காரணம் என தெரியாமல் தவிக்கும் ஜனனி பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
செயலில் இறங்கிய ஜனனி- சக்தி
இந்த நிலையில், இதுவரை காலமும் குணசேகரன் என்ன தான் பிரச்சினை செய்தாலும், பெண்கள் பொறுமையாக இருந்து சட்டத்தின்படி முடிவுகளை எடுத்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஈஸ்வரியை கொலைச் செய்ய முயன்றதால் மருமகள்களுக்கு கோபத்தின் உச்சத்தை அடைந்துள்ளனர்.
மீண்டும் வீட்டிற்கு வரும் ஜனனி குணசேகரனுக்கு எதிராக அமர்ந்து,“ என்னவாக இருந்தாலும் நேருக்கு நேர் முடிவு செய்யலாம்” எனக் கூறுகிறார். அத்துடன் “ “இனி எந்தவித வாக்குவாதங்களும், சண்டையும் கிடையாது செயல் மட்டும் தான்..” என்றும் எச்சரிக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |