குணசேகரனை அடக்கிய ஜனனி.. விசாலாட்சி மறைத்த ரகசியம்- இனியும் திட்டம் பலிக்குமா?
எதிர்நீச்சல் சீரியலில் இவ்வளவு நாட்களாக சொத்துக்களை வைத்து மிரட்டிக் கொண்டிருந்த குணசேகரனின் பித்தாலாட்டங்களை ஜனனி, வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, இரண்டாவது பாகத்தையும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னால் முடிந்தளவு பெண்களை அடிமைகளாக வைத்திருக்க நினைத்த குணசேகரன் வாழ்க்கையில் பெரிய புயலாக தேவகி கதை மாறியுள்ளது.
சக்தி தான் ராணா என்கிற உண்மையை ஜனனி கண்டுபிடிக்கிறார்.மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் இரண்டு உயிர்களும் மீண்டும் வருமா? என்பதை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

தன்னையே தூற்றும் விசாலாட்சி
இந்த நிலையில், சக்தியை மருத்துவமனையில் சேர்த்த ஜனனி வீட்டிற்கு வந்து அறிவுக்கரசியின் கையை உடைக்கிறார். அதன் பின்னர் வீட்டை கோயில் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் விசாலாட்சியிடம் தேவகி தான் இந்த சொத்துகளுக்கு சொந்தகாரி என்ற உண்மையை கூறுகிறார்.
இதனால் மனம் உடைந்து போன விசாலாட்சி, “ நல்ல மனைவியாக இருக்க விரும்பவில்லை. மாறாக நல்ல தாயாக இருக்க விரும்பினேன்..” என கண்ணீருடன் கூறுகிறார்.

இது ஒரு புறம் இருக்கையில் வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக குணசேகரன் அவரின் மற்ற தம்பிகளுடன் இணைந்து பிளான் போடுகிறார். ஆனாலும் யாரும் உதவிச் செய்வதற்கு முன் வருவது போன்று தெரியவில்லை.
மருத்துவமனையில் இருக்கும் கட்டுடன் வீடு திரும்பும் அறிவுக்கரசிக்கு இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |