Ethirneechal: அடுத்தடுத்து வரும் நெருக்கடி... களத்தில் தில்லாக ஜனனி செய்த காரியம்
எதிர்நீச்சல் சீரியலில் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ஜனனியை மாமியார் விசாலாட்சி மகிழ்ச்சியாக அனுப்பி வைத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தாங்கள் நினைத்தது போன்று சமையல் தொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். அதாவது இவர்களின் தொழிலுக்கு விசாலாட்சியும் முழு ஆதரவு தெரிவித்து தனக்கு தெரிந்த சமையல் ரகசியத்தினையும் கூறுகின்றார்.

இந்நிலையில் கடை திறப்பு விழாவிற்கு தயாரான ஜனனிக்கு அடுத்தடுத்து குணசேகரன் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
கடைசியாக ஜனனி ஹோட்டல் வைப்பதற்கு வாடகைக்கு எடுத்த இடத்தின் உரிமையாளரிடம் பேசி குணசேகரன் இடத்தை கொடுப்பதற்கு தடை போட்டுள்ளார்.
ஆனால் சக்தி ஜனனிக்கு ஆதரவாக நின்று செயல்படுவதுடன், இடையூறு செய்யும் நபரையும் நேருக்கு நேர் சந்தித்து சவாலும் போட்டுள்ளார்.
மருமகள்களை விசாலாட்சி ஆசிர்வாதம் செய்து கடை திறப்பிற்கு அனுப்பி வைக்கின்றார். ஞானத்தை சந்தேகப்பட்டு குணசேகரன் சத்தம் போடவும் செய்கின்றார்.
கடையை ஜனனி தடையின்றி திறந்துவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |