Ethirneechal: போலிசாரிடமிருந்து எஸ்கேப் ஆகிய ஜனனி... வீட்டில் உள்ள ஆதாரம் என்ன? பரபரப்பான கதைகளம்
எதிர்நீச்சல் சீரியலில் அமுதா உயிரிழந்த வழக்கில் ஜனனி கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற நிலையில், போலிசாரிடமிருந்து தப்பித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
சக்தியை கடத்தி வைத்த வழக்கில் போலிசார் குணசேகரனை தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அவர் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து செய்யப்பட்டு ஜாமினில் வெளிவர உள்ளார்.

வீட்டு பெண்களை தம்பிகள் அடக்கி பழி தீர்த்து வருவதுடன், வெளியே இருந்தவாறு குணசேகரன் ஜனனியை பழிதீர்த்துள்ளார். ஆம் ஜனனியுடன் வேலை செய்த அமுதாவை கொலை செய்து மாடியில் மறைத்து வைத்துள்ளார்.
மேலும் அமுதா பதிவிட்ட காணொளியும் ஜனனிக்கு எதிராக உள்ளது. மரண வாக்குமூலம் போன்று தனது உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு காரணம் ஜனனி தான் என்று அமுதா கூறிய காணொளி போலிசாரிடம் உள்ளது.
இதனால் ஜனனி கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற நிலையில், இதுவரை இல்லாத முடிவை தற்போது எடுத்துள்ளார். அதாவது போலிசாரிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
மற்றொரு குணசேகரன் வக்கில் வீட்டில் குணசேகரன் ஆதாரம் ஒன்று உள்ளது அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்த விடயமும் ஜனனிக்கு தெரிந்த நிலையில், ஆதாரத்தை கைப்பற்றுவதற்கு ஜனனி முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஜனனிக்கு ஆதாரவாக இருக்கும் கலெக்டருக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகின்றது. கதையின் போக்கு சற்று ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |