Ethirneechal: மன்னிப்பு கேட்ட குணசேகரன்... எரிச்சலில் பொங்கிய அறிவுக்கரசி
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், குணசேகரன் மன்னிப்பு கேட்டு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் சதியிலிருந்து மீண்டு வீட்டிற்கு வந்த ஜனனி, தற்போது கர்ப்பமாக உள்ளதால் வீட்டு பெண்கள் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

தற்போது யாரும் எதிர்பாராத வகையில், குணசேகரன் பேசியது ஜனனிக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... தான் ஏதாவது செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளவும் என்று அனைவர் முன்பு கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட அறிவுக்கரசி கடுப்பில் பயங்கரமாக பொங்கியுள்ளார். ஆனால் குணசேகரன் குறித்து நன்கு அறிந்த வீட்டு பெண்கள் சந்தேகத்தில் யோசித்து வருகின்றனர்.
ஜனனி குணசேகரன் அடுத்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றார். அடுத்தடுத்து குறித்த சீரியலில் நடக்கவிருப்பது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |